Apr 18, 2025
அக்கா...அக்கா... வீட்ல யாராது இருக்கியளா?,...
“யாரது?”
நாந்தேன் மேனகா வந்துருக்கேன் கா...
“வாம்மா உள்ள...என்ன வேணும்?”
அக்கா,...அந்தாளு ஊருக்குப் போய் இத்தோட ரெண்டு வாரம் ஆவுது க்கா... ஊட்ல பொங்க
சோறுக்கு அரிசி கூட இல்ல... அதான் உங்க கிட்ட கொஞ்சம் சோறு வங்கியாறலாம்-னு
வந்தேனுங்க க்கா...- உதட்டைச் சுழித்து
சுழித்துப் பேசினாள்.
“இதப் பாரு மேனகா... இப்டியே தெனமும் ஒவ்வொரு
வூட்லயும் போய் சோத்துக்கு நிக்கப் போறியா? அப்டி என்னதான் பண்ணுவானோ உன் ஊட்டுக்காரன்
ஊருல! போன் எதுவும் பேசினானா?”
எங்க க்கா!... மீண்டும் உதட்டைச் சுழித்தாள்.
அந்தாளு போன தெச தெரியல. அந்தாளோட மொத தாரம் அவன மந்தரம் போட்டு கட்டி வெச்சுட்டா-னு
சொல்றாங்க ஊர்காரங்க. எனக்கென்ன பண்றதுனே தெரில க்கா- உதடு கொஞ்சம் அதிகமாகவே சுழன்றது!
ஆம்! இந்த மேனகையின் கணவர் எனச்
சொல்லப்படுபவர் இன்னொருவளின் கணவர். மேனகை கட்டுமான தொழில் செய்துவரும் சங்கரன்
மேஸ்திரியின் கீழ் சித்தாளாக வேலை பார்த்து வந்து வந்தாள். அவளது கணவனாக
சொல்லப்படும் கோபாலு அதே மேஸ்திரியிடம் பெரியாள் வேலை செய்து வந்தான். மேனகையின்
உதட்டுச் சுழிப்பில் கிறங்கி இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு ஊரை விட்டு ஓடி வந்து
விட்டனர். இந்த கோபாலு கொஞ்சமாக தண்ணி அடித்தால் கூட தன் சம்சாரம் நினைவு வந்து
ஊருக்கு ஓடி விடுவான். பின் மேனகையின் நினைவு வந்ததும் இங்கு ஓடி வந்து விடுவான்.
இந்த முறை ஊருக்குச் சென்றவனை குல தெய்வத்துக்கு கட்டிப் போட்டு அங்கேயே வைத்து விட்டனர். இதனால் மேனகைக்கு ஒன்றும் குறைந்து போய்விடவில்லை. இப்போது வேலை செய்யும் பெரியாள் சந்துரு-விடம் உதட்டைச் சுழித்துச் சுழித்துப் பார்த்தும் பேசியும் கொண்டுதானிருந்தாள். இருந்தாலும் மழைக்காலம் ஆதலால் கால் வயிறு அரை வயிறு கஞ்சி தான்.
“இத பாரு மேனகா... நீ இப்படி கோபாலு கூடவும்
சந்துரு கூடவும் நெருங்கிப் பழகுறது இங்க தெருவுல யாருக்கும் சரியா படல. நீ இப்போ
வேல பாக்குற மேஸ்திரி ரங்கனுக்கு இதெல்லாம் புடிக்காது. நானே சொல்லக் கூடாது... எனக்கு
நீ செய்றது கொஞ்சம் கூட நல்லா இல்ல. பொம்பள-னா எப்படி வேணா இருக்கலாம்-னு சொல்ற
மாதிரி இருக்கு நீ பண்றது. இத கோபாலு-வோட நிறுத்திக்கோ நீ. சந்துருவை விட்டுரு.
என்ன க்கா நீங்களே இப்படி சொல்லிட்டிங்களே...
ரங்கன் மேஸ்திரி ரொம்ப நல்லவருக்கா... சரி சரி... இப்டியே பேசிகிட்டே நிக்காத...
சோறு பொங்கினதும் நானே குடுத்தனுப்பறேன்,...”
அடுத்தநாள் காலை...
“ஐயோ...போய்ட்டானே போய்ட்டானே... நேத்து
வரைக்கும் என் கூட ஒன்னும் மண்ணுமா இருந்த என்கூட்டுக்காரன் என்ன விட்டுட்டு அந்த
மேனகா கூட ஓடிப் போய்ட்டானே....”
மேஸ்திரி ரங்கனின் மனைவி தெருவில் கூவி கூவி
ஊரைக் கூட்டி அழுது கொண்டிருந்தாள்.... மேனகை கூட்டு ரோட்டுக்கு போகும் பஸ்ஸில்
மேஸ்திரி ரங்கனோடு எந்த களங்கமும் இல்லாமல் போய்க் கொண்டிருந்தாள்.
Mar 1, 2024
இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் கிறித்தவத்தின் வரலாறு எப்போதுமே செழுமையாகவும், பலனாகவும் இருந்து வருகிறது. பொதுவாக போர்த்துகீசியர்களால் இந்தியாவில் 15-ஆம் நூற்றாண்டில் கிறித்துவம் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும், பின்னர் 17-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் பரப்பப்பட்டது என்றும் நம்பப்படுகிறது.
புனிதர் இயேசுவின் 12 அப்போஸ்தல சீடர்களில் ஒருவரான 'செயின்ட் தாமஸ்' மூலமாக 52-AD-இல் கிறிஸ்தவம் இந்தியாவிற்கு வந்திருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. அவர் கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய தென் மாநிலங்களில் பல தேவாலயங்களை நிறுவினார். இறுதியில் கொல்லப்பட்டு மயிலாப்பூரில் புதைக்கப்பட்டார்.
தமிழ்நாட்டின் முதல் தேவாலயமான "திருவிதாங்கோடு ஆரப்பள்ளி"
அல்லது தோமையார் கோவிலைக் கட்டிய பெருமையும் இவருக்கு உண்டு. இந்த தேவாலயம் தான் உலகின் மிகப் பழமையான தேவாலயமாகவும் இருக்கலாம் என மக்கள் நம்புகிறார்கள்.
1900-களின் முற்பகுதியில், அப்போதைய மெட்ராஸ் பிரசிடென்சி பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் நிர்வாக உட்பிரிவாக இருந்தது. இந்த நேரத்தில், தமிழ் கிறிஸ்தவ நம்பிக்கை உயிரோட்டமாகவும், துடிப்பாகவும் இருந்தது. மிக முக்கியமாக, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழ் கிறிஸ்தவர்கள் முக்கிய பங்கு வகித்தனர்.
தமிழ்நாட்டின் தேவாலயங்கள் சமூகத்திலும் இந்திய வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளன. காலங்காலமாக, கிறித்துவம் தமிழ்நாட்டில் பரவலாக பரவி வருகிறது, மேலும் தமிழ் மாநிலத்தின் தேவாலயங்கள் இந்த உண்மையை உறுதிப்படுத்துகின்றன. இது தவிர, இந்த தேவாலயங்கள் நாட்டின் தேசிய பாரம்பரியத்தையும் வளப்படுத்துகின்றன.
இனி தமிழ் நாட்டின் முக்கிய தேவாலயங்கள் பற்றி காண்போம்.
தமிழ்நாட்டின் மற்றொரு குறிப்பிடத்தக்க தேவாலயம் "ஸ்வார்ட்ஸ் தேவாலயம்" ஆகும் (Schwartz Church). தஞ்சாவூரில் அமைந்துள்ள இந்த தேவாலயம் 1779 ஆம் ஆண்டு டேனிஷ் மிஷனரியான Christian Friedrich Schwarz-ஆல் கட்டப்பட்டது. இந்த தேவாலய கட்டிடக்கலை மிகவும் எளிமையானது. இந்த தேவாலயத்தின் கண்கவர் அம்சங்களில் Schwartz மரணப் படுக்கையில் கிடக்கும் சிற்பம் மற்றும் அவருக்கு அருகில் மிஷனரி Guericke மற்றும் தஞ்சாவூர் மராட்டிய மன்னர் இரண்டாம் சர்போஜி ஆகியோர் உள்ளனர்.
முன்பு சொன்னது
போல் கி.பி 52-இல் இந்தியாவிற்கு வருகை தந்த இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களில் புனித தாமஸும் ஒருவர். இவர் மரணமடைந்த காஞ்சிபுரத்தின் புறநகரில், இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த இடத்திற்கு "செயின்ட் தாமஸ் மவுண்ட்" என்று பெயரிடப்பட்டது. இந்த சிறிய மலையில் கி.பி
1514-இல் போர்த்துகீசியர்களால் நிறுவப்பட்ட ஒரு பழமையான தேவாலயம் உள்ளது. அவர் இறக்கும் போது அப்போஸ்தலர்கள் பிடித்து வைத்திருந்த ஒரு பழைய கல் சிலுவை உள்ளது.
"புனித சவேரியார் தேவாலயம்" கன்னியாகுமரியில் உள்ளது. இது 15-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு பழமையான தேவாலயம் ஆகும். இந்த தேவாலயம் இந்தியாவிற்கு வருகை தந்த கத்தோலிக்க பாதிரியார் புனித பிரான்சிஸ் சேவியரின் நினைவாக கட்டப்பட்டது.
"பூண்டி மாதா பசிலிக்கா" தஞ்சாவூரில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது ரோமன் கத்தோலிக்க தேவாலயம். இந்த நேர்த்தியான தேவாலயம் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.