Apr 24, 2015

படங்கள்!

படங்கள்: ஆயிஷா மைந்தன் (அப்துல் காதர்)
பாடல்: 'மாக்கவிஞன் பாரதி' (பகைவனுக்கு அருள்வாய்)

புகை நடுவினில் தீயிருப்பதைப் 
பூமியிற் கண்டோமே - நன்னெஞ்சே!
பூமியிற் கண்டோமே!


பகை நடுவினில் அன்புரு வானநம்
பரமன் வாழ்கின்றான் - நன்னெஞ்சே!
பரமன் வாழ்கின்றான்!


சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்
     செய்தி யறியாயோ? – நன்னெஞ்சே!
குப்பையிலே மலர் கொஞ்சங் குருக்கத்திக்
     கொடி வளராதோ? - நன்னெஞ்சே!


உள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில்
     உள்ளம் நிறைவாமோ? - நன்னெஞ்சே!
தெள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சையும்
சேர்த்தபின் தேனாமோ? - நன்னெஞ்சே!

0 comments: