Dec 15, 2019

உப்பு, புளி, மிளகாய்! - 'கேசரி'

‘கேசரி’ – பேர கேட்டதும் சும்மா நெய்யும் முந்திரியும் நாவில் நாட்டியம் ஆடும் அந்த வஸ்து நினைவில் வந்து போகிறதா?!!!.... பெரும்பாலான தமிழகத் திருமண பந்திகள்-ல முக்கிய ஐட்டமா இடம் பெரும் பண்டம்-னு இதுக்கு ஒரு அவார்டே தரலாம்ங்க. அட,..ஆமாங்க, இந்த பதிவுல நாம பாக்கப் போறது கேசரி-யோட கதையைத்தான்.

மேலோட்டமா பார்த்தால் இந்த கேசரி வகையறா தென் இந்திய இனிப்பு வகையில தான் சேர்த்தி ஆகுது-ங்க. அதிலும் முக்கியமா கர்நாடகா பகுதிகள்-ல இந்த கேசரி ஒரு பொது உணவு.

கேசரி என்றால் வட மொழியில் 'அரசன்' என்று பொருள். இனிப்புகளுக்கெல்லாம் அரசனாக விளங்குவது போல் உள்ளதால் இதற்கும் கேசரி எனப் பெயரிட்டனர் என்றும் ஒரு விளக்கம் உண்டு.


கேசரி பெரும்பாலும் ரவை அல்லது செமோலினா (அதாவது ‘சேமியா’) கொண்டு சமைக்கப்படுகிறது. ஒரு அடுப்பில் பாத்திரத்தை வைத்து, சூடானதும், அதில் நாலு கரண்டி பசும் நெய் விட்டு, அதில் முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை ஆகியவற்றை கொட்டி வறுத்தெடுத்து வைத்துக்கொள்ளவும்; அதே நெய்யில் தண்ணீர் விட்டு கொஞ்சம் கொஞ்சமாக வறுத்த ரவையைக் கொட்டிக் கிளறி அவ்வப்போது நெய் சேர்த்துக் கொண்டே இருக்கவும். ரவை லேசாக வேக ஆரம்பிக்கும்போது அந்த கலவையில் சர்க்கரை-ஐ கொட்டிக் கிளறி மூடி வைத்து இறக்கவும். மேலே சேர்க்கைக்கு வறுத்து வைத்திருக்கும் முந்திரி, பாதாம், திராட்சை, கூடவே கொஞ்சம் தூக்கலாக குங்குமப்பூ-வை சேர்த்து....சேர்த்து...சேர்த்து... அடேயப்பா... நாவில் எச்சில் ஊறுகிறது...

இவ்வளவு தாங்க கேசரி. வெரி சிம்பிள்! அப்படியே ஸ்பூனில் ஒரு விள்ளல் எடுத்து வாயில் வைத்தால், நாவில் வழுக்கிக் கொண்டு தொண்டையில் இறங்கும் இதன் சுவை, ஏப்பம் விடும் வரை அப்படியே இருக்கும்.

இதனுடைய 'கார version' தான் உப்புமா என்றும் சொல்வார்கள். இதே ரவா கேசரியை சேமியாவிலும் செய்யப்படும் இந்த இனிப்பு உணவு 12-ஆம் நூற்றாண்டிலேயே சாளுக்கிய வம்ச மன்னர்களால் பெரிதும் விரும்பி உண்ணப்பட்டுள்ளது.


இது தாங்க நம்ம கேசரியோட மிகக் குறுகிய சுவையான கதை. உடனே போய் கேசரியை செய்து சாப்பிட்டு இந்த ஜன்ம பிராபல்யத்தை முடிச்சு வைங்க. அடுத்த ‘உப்பு, புளி, மிளகாய்!’ பதிவில் சந்திப்போம். விரைவில்!

0 comments: