Showing posts with label உணவு. Show all posts
Showing posts with label உணவு. Show all posts

Oct 15, 2022

உப்பு, புளி, மிளகாய் – ‘பிரட்'

            மனிதன் அன்றாட வாழ்கைக்கு ஓடி கொண்டிருப்பதே உணவுக்காக தான். உணவில்லையேல் மனிதன் இல்லை. அம்பானி, அதானி போன்றோரும் சாதாரண மனிதனும் ஓடி கொண்டிருப்பது உணவுக்காகவே. அவ்வாறு எல்லா தரப்பினரும் உண்ண உகந்தது பிரட் என்னும் ரொட்டி தான். பிரட் என்றதுமே நமக்கு நினைவுக்கு வருவது ரொட்டி என்னும் நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுதான்.ஏழைகளோ, செல்வந்தர்களோ யாராகிலும் பிரட் உண்ணாமல் இருந்திருக்க முடியாது.
            வரலாற்றுப்படி பிரட் என்னும் ரொட்டி வகை கி.பி.8000 ஆண்டில் மத்திய கிழக்குப் பகுதியான எகிப்தில் தயாரானது என சொல்லப்படுகிறது. முதன் முதலில் எகிப்தியர்கள் ஒயின்-ஐ மாவுடன் கலந்து ஒரு புது வகையான உணவு தயாரித்தனர். அது மக்களுக்கு மிகவும் பிடித்து போகவே அதன் அடுத்த முயற்சிக்கு முன்னேறினர். பின்னாட்களில் உலகின் பல நாடுகளிலும் பல வகையான பிரட் வகைகள் தயாரிக்கப்பட்டன. அதில் ரோமர்கள் கி.பி.450 -களில் மாவில் தண்ணீரைக் கலந்து அதனுடன் பதப்படுத்த பட்ட ஈஸ்ட் கலந்து புது வகையான ரொட்டி சமைத்தனர். இது வெள்ளை ரொட்டி ஆகும்.
            
            பெரும்பான்மையான மேல் வர்க்க ரோமர்கள் மட்டுமே இதனை உண்ணலாம் என ஒரு கூற்றிருந்தது. இதே போல் மத்திய பிரிட்டிஷ் காலத்தில் ரோம் நாட்டில் இருந்தது போலவே ஒரு சட்டம் இருந்தது. அதாவது மேல் வர்க்க மக்கள் மட்டுமே இந்த வகை ரொட்டியை உண்ணலாம் என்னும் வழக்கம் இருந்தது. பின்னர் கி.பி.600-களில் பெர்சியர்கள் காற்றலை போல வேலை செய்யும் ஒரு இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்தனர். இதன் மூலம் ரொட்டிக்கு தேவையான மாவையும், தானியங்களையும் சுலபமாக அரைக்க முடிந்தது.
            1834-களில் சுவிட்சர்லாந்தில் ரோல்லர் மில் கண்டுபிடிக்கப் பட்டது. இது உலகில் ரொட்டி தயாரிக்கும் முறைக்கு பெரும் புரட்சியாக அமைந்தது. மேலும் 20-ஆம் நூற்றாண்டுகளில் ரொட்டி உணவு மிருதுவாகவும், வெள்ளை நிறத்திலும், மேலும் அதிக சுவையுடனும் தயாரிக்கப்பட்டது. இப்போதெல்லாம் ரொட்டி தயாரிப்பு என்றாலே கோதுமை மாவு என்று சொல்லப்படுகிறது. அனால் இப்போதோ இந்த மாவிலும் எந்த வகை தானியத்திலும் ரொட்டி சமைக்கலாம் என்றாகிவிட்டது. யுத்தக்களம் போல் உலகில் ஓடிக் கொண்டிருக்கும் நாம் இதோ இப்போது பேசப்படும் ரோட்டிக்காகதான். 

            ரொட்டி இன்றி இன்றைய உலகம் உருவாகி இருக்காது. ஆதி முதல் அந்தம் வரை நம்முடனே பயணப்பட்டுக் கொண்டிருக்கும் ரொட்டியை இன்னமும் சீராக்கி புசிப்போம்.

Aug 10, 2020

உப்பு, புளி, மிளகாய் – ‘சர்க்கரைப் பொங்கல்’!

 ஆஞ்சநேயர் கோயில்-ல இருந்து அம்மன் கோயில் வரைக்கும் தமிழ்நாட்டுல இருக்க மொத்த கோயில்கள்-ளையும் பாரபட்சமே இல்லாம வழங்கப்படும் ஒரு பிரசாதம் ‘சர்க்கரைப் பொங்கல்’-னு சொல்லலாம் மக்களே! ஆம்! சிறியதாக ஒரு கையடக்க தொன்னையில் சுடச்சுட நெய்யும் முந்திரியும் மிதக்க கொஞ்சமாக சர்க்கரைப் பொங்கலை வாங்க அவரவர் போட்டி போடுவது நாம் அனேகமாக எல்லா கோயில்கள்-லயும் பார்க்கலாம். அத்தனை ருசியான பதார்த்தத்தைப் பற்றி நம் ‘உப்பு, புளி, மிளகாய்’-யில் பேசாமல் போவது தெய்வ குற்றமாகுமே!


பொதுவா நம்ம வீட்டிலேயே  எதாவது  சின்ன விசேஷம்னா கூட உடனே செய்யும் பட்சணம் இந்த சர்க்கரைப் பொங்கல் தாங்க. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சுவைப்பதும் இந்த பொங்கல் தான்.



அரிசியையும் பாசிப்பருப்பையும் வறுத்தெடுத்து தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் அதனை வேக வைகவேனுடும். அதே சமயத்தில் வெல்லப் பாகைத் தனியாக எடுத்து வைத்து....வேக வைத்த அரிசி பருப்பு பொங்கி வரும்போது அதில் வெல்லப் பாகை கலந்து விட வேண்டும். மேலே நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை ஆகியவற்றைக் கலந்து விட்டால்....அவ்வளவு தாங்க! நெய்யில் செய்த சர்க்கரைப் பொங்கல் தயார்....நெய்யின் வாசனையும் சுவையும் தூக்கும்..


அவசியம் செய்து பார்த்து சுவைத்து மகிழலாம் வாங்க.... இனிமேல் எந்த கோயிலுக்கு சென்றாலும் நம் கண்கள் சர்க்கரைப் பொங்கலையே தேடும் என்பதில் ஐயமில்லை!

Dec 16, 2019

உப்பு, புளி, மிளகாய்! - 'பிரியாணி'


அதாவது,....ஒரு நிமிஷம்! எனக்கு இத எப்படி சொல்றதுன்னே தெரியலைங்க! சொல்ல வாயெடுத்தாலே நாக்கில் ஜலம் ஊறுகிறது! சரி! ரொம்ப சஸ்பென்ஸ் வெக்காம சொல்லிடறேன்! இந்த 'உப்பு, புளி, மிளகாய்!' பதிவுல நாம பேச போறது நம்ம எல்லாரும் விரும்பி சாப்பிடுற 'பிரியாணி' பத்தி தாங்க! "அதென்னமோ தெரியல...என்ன மாயமோ தெரியல! பிரியாணி-னு சொன்ன உடனே பசி வந்துருது! அபிராமி...அபிராமி!...அட..இல்ல இல்ல... பிரியாணி...பிரியாணி!" சரி வாங்க சாப்பிடுவோம்!?!... சே சே! வாங்க பேசுவோம்!!!..

பிரியாணி எப்படி, எங்கேயிருந்து இந்தியா வந்தது?! - இதுக்கு பல பல கதைகள் நம் இந்தியா முழுக்கப் பரவி இருக்குங்க! அதுல, நமக்குத் தெரிஞ்ச, அறிஞ்ச விஷயங்களை மட்டும் நாம பாக்கலாம்

இந்தியாவை பலதரப்பட்ட மன்னர்கள் படை எடுத்து ஆட்சி செய்துருக்காங்க. உதாரணமா, துருக்கியர்கள், அரேபியர்கள், பெர்சியர்கள், ஆப்கானிஸ்தானியர்கள்... இப்படி பலர் நம்ம நாட்டை படையெடுத்து வந்து இங்கேயே ஆட்சியை நிலைநாட்ட பல வகை உத்திகளை கையாண்டார்கள்! அப்படி இந்த நாட்டு படை நம்ம நாட்டுக்குள்ள வரும்பொழுதே அவர்கள் தங்களுடைய பண்பாடு, போர் முறை, உணவு முறை போன்றவற்றையும் தங்களுடனே கொண்டுவந்து விட்டார்கள். அப்படி வந்தது தான் பிரியாணி என்னும் "ஊண் சோறு"!...



அட! அது என்னங்க "ஊண் சோறு"?!! அப்படி-னு கேக்கறீங்களா

நம்ம ஊரை ஆட்சி செய்ய வந்த மன்னர்களின் விருப்ப உணவாக அமைந்தது அரிசி உணவில் மாமிசம் சேர்த்து செய்யப்பட ஒருவகை மசாலா உணவு. பின்னர், 15-ஆம் நூற்றாண்டு தொடங்கி 19-ஆம் நூற்றாண்டு வரை கோலோச்சிய முகலாயர்கள் தாங்களும் தங்கள் பங்குக்கு இந்த மாமிச உணவை பிளாப், கபாப், பிரியாணி என தங்கள் முறையில் செய்து இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தினார்கள்

இந்த முகலாயர்களின் வருகைக்கு முன்பாகவே, கி.மு.2-ஆம் நூற்றாண்டிலேயே தமிழ் இலக்கியத்தில் "ஊண் சோறு" எனும் உணவு குறிப்பிடப் பட்டுள்ளது.

தமிழக மன்னர்கள் அவர்களது போர் வீரர்களுக்கு அரிசி-யில் நெய், புலால்,மஞ்சள், மிளகு, கருவேப்பிலை முதலியவற்றை சேர்த்து உணவாக்கி படைத்தனர்.  இந்த வகை ஊண் உணவும் முகலாயர்கள் கொண்டு வந்த உணவும் சற்றேரக்குறைய ஒரே மாதிரி இருந்துள்ளது

சரி. இந்த 'பிரியாணி' அப்படிங்கிற வார்த்தைக்குப் பொருள் என்ன?! பிரியாணி என்னும் சொல் 'பிரியன்' (Birian) என்ற பெர்சிய மொழியில் இருந்து வந்தது. பிரியன் என்றால்  "சமைப்பதற்கு முன் வறுக்கப்பட்டது" என்று பொருள்

பல ஆண்டுகளுக்கு முன்னாள் உயர்குடி மக்கள் மட்டுமே சமைத்து உண்ணக்கூடிய உணவாக இருந்த பிரியாணி, இன்று தெருவுக்குத் தெரு, மூளைக்கு மூளை ஒரு பிரியாணி கடை, ஆற்காடு பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி, முகல் பிரியாணி, கல்கத்தா பிரியாணி, திண்டுக்கல் பிரியாணி என மாற்றம் கண்டு, பல வகை பிரியாணிகளாக வளம் வருகின்றன.

எழுத்தாளர் பா.ராகவன் சொல்வது போல், "உணவின் ருசியே, வாழ்வின் ருசி" என்பதை கருத்தில் கொண்டு பிரியாணி செரிக்க வாழ்ந்திடுவோமாக!

சந்திப்போம் விரைவில்!