Showing posts with label Bookmarks. Show all posts
Showing posts with label Bookmarks. Show all posts
Apr 9, 2014
Posted by
தமிழச்சி சிவா-ஆயிஷா மைந்தன்
at
Wednesday, April 09, 2014
Labels:
Bookmarks,
நூலகம்
0
comments
சர்வதேச சிறப்பு நூலகர்கள் தினம்! [ஏப்ரல் 13]
‘சர்வதேச
சிறப்பு நூலகர்கள் தினம்’, [International
Special Librarian’s Day] சிறப்பு
நூலகர்களையும், நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறைக்கு அவர்களின் தனிப்பட்ட
பங்களிப்புகளையும் சிறப்பிக்கும் விதமாக செயற்படுத்தப்படுகிறது. இத்தினம் சிறப்பு
நூலகங்கள் இயக்கம் [Special
Libraries Association (SLA)] என்னும்
இயக்கத்தினால் 1991-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
சர்வதேச
சிறப்பு நூலகர்கள் தினத்தன்று உலக அளவில் பல்வேறு சிறப்பு நூலகங்கள், மற்றும் தகவல்
அறிவியல் துறையில் மாறிவரும் தொழில்நுட்பங்கள் தொடர்பான மாநாடுகளும், கூட்டங்களும்
நடைபெறுகின்றன.
சிறப்பு நூலகர்கள்!
‘சிறப்பு
நூலகர்கள்’ என்னும் கூறு, பல்வேறு பெருநிறுவன நூலகங்கள், அரசாங்க நூலகங்கள்,
அறிவியல் நூலகங்கள், சட்ட நூலகங்கள், மருத்துவ நூலகங்கள் மற்றும் அருங்காட்சியக
நூலகங்கள் போன்ற ஏதேனும் ஒரு துறை சார்ந்த நூலகங்களில் சேவையாற்றும் நூலகர்களைக்
குறிக்கிறது. இவ்வகை நூலகங்கள் ‘தகவல் வள மையங்கள்’ (Information Resource Centres) எனவும் குறிக்கப் படுகின்றன.
1909-இல் நடந்த ‘வெர்டானா மாநாட்டில்’ ஜான்
காட்டன் டானா (John Cotton Dana) என்னும் அமெரிக்க நூலகரும், இன்னும் 26 நூலகர்களும்
ஒன்றிணைந்து, சில சிறப்புத் துறைகளில் தனி கவனம் செலுத்தும் வகையில், அவைப் பற்றிய
தகவல்கள் அறிந்த நூலகர்கள் அவசியம் வேண்டும் என முடிவு செய்தனர். இந்த மாநாட்டின் அறிக்கையை
அடிப்படையாகக் கொண்டே ‘சிறப்பு நூலகர்கள் இயக்கம்’ (Special Libraries Association) ‘சிறப்பு நூலகர்கள்’ (special librarians) மற்றும் ‘சிறப்பு
நூலகங்கள்’ (special libraries) என்னும் சொற்பதங்கள் நடைமுறைக்கு வந்தன.
இந்தச் சிறப்பு
நூலகர்கள், ஒரு துறை சார்ந்த பொதுவான செய்திகள் மற்றும் நூல்களைத் தவிர்த்து, அத்துறை
பற்றிய பரவலான, அதிமுக்கியமான, எளிதில் கிடைக்கமாட்டாத மற்றும் நம்பத்தகுந்த
செய்திகள் மற்றும் நூல்களில் கவனம் செலுத்துவர். அல்லது அவர்கள் பணி செய்யும்
அமைப்பிற்குத் தொடர்பான செய்திகள் மற்றும் நூல்களில் வித்தகர்களாக இருப்பர்.
Jun 5, 2013
Posted by
ஆயிஷா மைந்தன்-தமிழச்சி சிவா
at
Wednesday, June 05, 2013
Labels:
Bookmarks,
எண்ணங்கள்,
புத்தகம்
2
comments
இது உண்மையிலேயே என்னை பிரமிக்கச் செய்த ஒரு நிழற்படம். புத்தகங்களும், வாசிக்கும் பழக்கமும் வேகமாக குறைந்து வரும் இன்றையச் சூழலில் இது போன்ற நகரும் குட்டி நூலகங்கள் [mobile library] ஆங்காங்கே அமைத்தல் மக்களிடையே வாசிக்கும் பழக்கத்தை வளர்க்க உதவும். முக்கிய பேருந்து நிலையங்களிலும், மக்கள் பரவலாக கூடும் சந்திப்புகளிலும் இவற்றை அமைக்க வேண்டும். வாசிக்கும் பழக்கம் இல்லாதவர் கூட, பேருந்திற்கோ, அல்லது யாரையாவது சந்திக்கக் காத்திருக்கும் போதோ, பொழுதைக் கழிக்க ஒரு புத்தகத்தைப் பயன்படுத்தலாம். அதன் மூலம் அவர்களுக்கும் வாசிக்கும் பழக்கம் வளர வாய்ப்புகள் உண்டு. சின்ன சிறுகதை தொகுப்புகள், படக்கதைப் புத்தகங்கள், குட்டி கதை நூல்கள் போன்ற குறைந்த நேரத்தில் படித்து முடிக்கக் கூடிய நூல்களை இங்கு பயன்படுத்தலாம்.
ஆவணச் செய்தால் நாடும் வளம் பெறும், நாமும் நலம் பெறுவோம்.
"புத்தகங்களை வாசிப்போம் நேசிப்போம்!"
May 23, 2013
Posted by
தமிழச்சி சிவா-ஆயிஷா மைந்தன்
at
Thursday, May 23, 2013
Labels:
Bookmarks,
எழுத்தாளர்கள்,
புத்தகம்
0
comments
சமீபத்தில் ஒரு புத்தகத்தின் மையப் பகுதியில் வெளிவந்திருந்த புத்தகம் பற்றிய ஒரு குறிப்பு - எழுத்தாளர் திரு. எஸ். ராமகிருஷ்ணன் (எஸ்.ரா) அவர்களின் பார்வையில்...
"நல்ல புத்தகம் என்பது சக மனிதன் மீதான அன்பும் உலகின் மீதான தீராத அக்கறையும் கொண்டிருக்கும். உண்மையை சொல்வதில் பாசாங்கு செய்யாது. மனதின் அந்தரங்கத்தில் சென்று, சந்தோஷமும் துயரமும் கொள்ளச் செய்யும். தன்னை மேம்படுத்திக் கொள்ளவும், உலகை மேம்படுத்தவும் உதவி செய்யும். எந்த அதிகாரத்திற்கும் பயப்படாது. மறதிக்கு எதிரான நினைவின் போராட்டமாக அமையும்."
எழுத்தாளர் எஸ்.ரா-வின் வலைப்பக்கம்: http://www.sramakrishnan.com/
Apr 19, 2013
Posted by
தமிழச்சி சிவா-ஆயிஷா மைந்தன்
at
Friday, April 19, 2013
Labels:
Bookmarks,
புத்தகம்
0
comments
ஏப்ரல் 23 - உலக புத்தக தினம்!... முன்பெல்லாம் நமது சமூகம் எதற்கெல்லாமோ தினங்களைக் கொண்டாடிக் கொண்டிருந்தது. இப்போது விழித்து கொண்டது போலும். எந்த இணைய பக்கத்தைப் பார்த்தாலும் எங்கோ ஒரு மூலையில் பளிச்சென நிற்கிறது உலக புத்தக தின அழைப்பிதழ்/விளம்பரம். நல்ல விஷயம் தான். கொண்டாட கூடிய தினம் தான். நாமும் நம்மால் முடிந்த உலக புத்தக தின விளம்பரத்தைப் பரப்புவோமே,... விழித்தெழட்டும் இன்னமும் இருட்டில் உறங்கும் சமுதாயம். புத்தகங்களை வாசியுங்கள், நேசியுங்கள்! வாழ்வு வளம்பெறட்டும்! அனைத்து புத்தக ஆர்வலர்களுக்கும் advance Happy World Book Day!... 23 அன்று சந்திப்போம், ஏதாவதொரு புத்தகக் கண்காட்சியிலோ அல்லது புத்தகக் கடைகளிலோ அல்லது நூலகங்களிலோ...
May 29, 2011
"Books can not be killed by Fire. People die, but Books never die. No man & no force can abolish memory; No man & no force can put thought in a concentration camp forever; No man & no force can take from the World, the Books that embody man's eternal fight against tyranny of every kind. In the war, we know, Books are weapons. And it is a part of your dedication always to make them weapons for man's freedom." -Franklin D.Roosevelt
Subscribe to:
Comments (Atom)



