May 23, 2013

நல்ல புத்தகம்: எஸ்.ரா-வின் பார்வையில்

சமீபத்தில் ஒரு புத்தகத்தின் மையப் பகுதியில் வெளிவந்திருந்த புத்தகம் பற்றிய ஒரு குறிப்பு - எழுத்தாளர் திரு. எஸ். ராமகிருஷ்ணன் (எஸ்.ரா) அவர்களின் பார்வையில்...


"நல்ல புத்தகம் என்பது சக மனிதன் மீதான அன்பும் உலகின் மீதான தீராத அக்கறையும் கொண்டிருக்கும். உண்மையை சொல்வதில் பாசாங்கு செய்யாது. மனதின் அந்தரங்கத்தில் சென்று, சந்தோஷமும் துயரமும் கொள்ளச் செய்யும். தன்னை மேம்படுத்திக் கொள்ளவும், உலகை மேம்படுத்தவும் உதவி செய்யும். எந்த அதிகாரத்திற்கும் பயப்படாது. மறதிக்கு எதிரான நினைவின் போராட்டமாக அமையும்." 

எழுத்தாளர் எஸ்.ரா-வின் வலைப்பக்கம்: http://www.sramakrishnan.com/

May 16, 2013

Learn Library Science!

சென்னைப் பல்கலைக் கழக "நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை" இந்தியாவில் உள்ள சில முக்கிய துறைகளுள் நீண்ட காலமாக கல்விச் சேவை அளித்து வரும் துறைகளுள் ஒன்று. இது, 1931-ஆம் ஆண்டு "இந்திய நூலகவியலின் தந்தை" என்று போற்றப்படும் "முனைவர். S. R. ரங்கநாதன்" அவர்களால் நிறுவப்பட்டது. இத்துறை வெவ்வேறு காலகட்டங்களில் தொடர்ந்து நூலகவியல் கல்வியை அளித்து வருகிறது. தற்பொழுது முதுநிலை அறிவியல் பட்டமேற் படிப்பாக "முதுநிலை நூலகம் மற்றும் தகவல் அறிவியல்" [M.Sc., Library and Information Science] என்ற பட்டமேற் படிப்பை வழங்குகிறது. மேலும் தகவல்களுக்கு சென்னைப் பல்கலைக் கழக வலைதளத்தைப் பயன்படுத்தி பயன்பெறவும். 

வாழ்த்துகளுடன்,
தமிழச்சி சிவா M.Sc.,[LIS].,