Apr 15, 2013

நட்புக்கு!,...........

காலையிலே நேரில் பார்த்து 
நெடுநேரம் பேசித் தீர்த்து 
மாலையிலே கைக்கோர்த்து
மனசெங்கும் உனைச்சுமந்து 
போகும்போது டாட்டா சொல்ல,
நண்பா, நான் கூட இல்ல!  

அன்றாடம் போய்த்திரும்பும் 
அலுவலக வேலையில்ல!
விட்டு ஓடி வந்துவிட 
விதியும் என்ன விடவில்ல!

உனைச் சுமந்த நெஞ்சிலின்று 
இணைச் சுமந்து போகின்றேன்,...
உன்னை விட்டு நெடுந்தொலைவு
உள்ளுக்குள்ளே உன் நினைவு!
நண்பா,... 
போகின்றேன் நான் ,...
உன்னை விட்டு நெடுந்தொலைவு
உள்ளுக்குள்ளே உன் நினைவு!

இரவெல்லாம் விழித்திருப்பேன்
உனைக் காணத்  துடித்திருப்பேன்!
அவன் என்னைக் கேட்டுவிட்டால்,...
கண்சிமிட்டி நான் சிரிப்பேன்!
கண்சிமிட்டும் நேரத்திலும்
கனவுபோல உன் முகமே!

எத்தனை நாள்?- தெரியாது
எப்போது?- தெரியாது
உயிர்நண்பா... உன்னை என்று
பார்ப்பேனோ? தெரியாது!

இறகொடிந்து போகும் முன்னே,
இறை என்னைக் கொள்ளும் முன்னே,...
உனைத் தேடி நான் வருவேன்
உன் மடியில் விடைபெறுவேன்! 

இணை பிரிந்து திரும்பும்வரை- என்
நினைவுகளை வைத்திரு நீ!...
துணை தேடி வருகையிலே- உன் 
நேசமதைத் தந்திடு நீ!

0 comments: