Mar 22, 2023
வையத்து மாந்தரெல்லாம்
வளமுடனே வாழுதற்கு 
நலமான சிந்தனை வேண்டும்...
சிந்தனைக்கேற்ற செயலும் வேண்டும்!
நாட்டுநலனும் வீட்டுநலனும் 
நன்றாய் ஓங்கிச் செழித்திடவே 
நல்லோர் வாக்கைத் தொழுதிடல் வேண்டும்...
நாளும் அதன்வழி நடந்திடல் வேண்டும்!
பெண்கள் உயர்வதை உலகுக்குக் காட்டிய 
பெரியோர் மண்ணில் பலருண்டு...
இதை உணர்ந்து நடந்தால்
பெண்கள் வாழ்வில் ஒளியுண்டு!
அகிலம் போற்றும் அன்னை தெரசா
அருள்நெறி வழியைக் காட்டியவர்!
இருட்டு வாழ்வில் மூழ்கிடுவோர்க்கு
புது வாழ்வாம் ஒளியைக் கூட்டியவர்!
வீரமும் அறிவும் பெண்கள் பெற்றால் 
தீரமும் உயர்வும் ஓங்கிடுமே!
நல்ல சேவையும் பெருகித் தழைத்திடுமே!
மேத்தா பட்கர், நம் கிரண்பேடி
நாட்டுக் குழைக்கும் நங்கையராம்
நம் பாரதம் போற்றும் தனி மங்கையராம்! 
பாரதி சொன்ன புதுமைப் பெண்ணாய் 
பாரின் மீதில் வலம்வர வேண்டும்!
நாளும் நாளும் நாம் கற்று 
நாட்டை உயர்த்தி நலம் தர வேண்டும்!
பெண்ணின் பெருமை உயர்ந்து நின்றால் 
நம் மண்ணின் பெருமையும் உயர்ந்திடுமே!
இதை எண்ணத்தில் கொள்வோம்...
பொது நெறி சொல்வோம்...
பெண் உரிமை தன்னையே காத்திடுவோம்!
வள்ளுவன் வழியில் சமநெறி பாடி
 
 Posts
Posts
 
 
0 comments:
Post a Comment